ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

ஜூன் 25, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழு, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான இலங்கை பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டது.

OHCHR குழுவில் இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச்; ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் உலகளாவிய செயல்பாட்டுப் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவன்; வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் திருமதி லைலா நசரலி மற்றும் OHCHR செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லாரன்ஸ் ஆகியோர் அடங்குவர்.

இலங்கைத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர், டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, வெளியுறவு அமைச்சின் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொது இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் துஷார   ரொட்ரிகோ, வெளியுறவு அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி தயானி மெண்டிஸ் மற்றும் தேசிய புலனாய்வுத் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா. உயர் ஸ்தானிகர், பொறுப்புக்கூறல், மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள தீர்வுகள் பெற்றுக்கொடுத்தல் மற்றும் தொடர்ச்சியான நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் குறித்து உரையாற்றினார். பொருளாதார நெருக்கடிக்குள் மனித உரிமைகள் மீதான தாக்கம் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் பொருளாதார மீட்சி மற்றும் சமூக நீதியை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கத்தின் நீடித்த உறுதிப்பாட்டை திரு. துர்க் பாராட்டினார். ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதில் பரஸ்பர பொறுப்பை அவர் எடுத்துரைத்தார், மேலும் தற்போதைய மனித உரிமை முயற்சிகளை ஆதரிப்பதில் இலங்கை அரசாங்கத்திற்கும் OHCHR க்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை பிரதிநிதிகள் குழு மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. நல்லிணக்க செயல்முறையின் மையமாக இருக்கும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் (ONUR) போன்ற முக்கிய நிறுவனங்களின் திறம்பட செயல்பாட்டிற்கான ஆதரவையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

இலங்கைக்கும் OHCHR க்கும் இடையிலான பரஸ்பர ஈடுபாட்டை வலுப்படுத்துவதிலும் ஆக்கபூர்வமான உரையாடலை வளர்ப்பதிலும் இந்த சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.