இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

ஒக்டோபர் 29, 2025

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிப்பது தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், தற்போதைய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 28) உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமை தாங்கினார், மேலும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காணிகளை மீண்டும் கையளிக்கும் வேலை திட்டத்தின் போது ஏற்படுகின்ற செயற்பாட்டு மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்ப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக இராணுவ வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும்  நடவடிக்கைகளை துரிதபடுத்துவதற்காக அந்த காணிகளில் உள்ள இராணுவத்தின் கட்டம் கட்டமாக மீளப்பெறுவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்தியாவசிய பாதுகாப்பு நிலைகளில் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுமக்களின் சொத்துகளுக்கு எவ்வித பாதிப்புகள் ஏற்படாத விதத்தில் புதிய எல்லை சீரமைப்புகளை இறுதி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

தேசிய நல்லிணக்கத்தின் முக்கிய அங்கமாக காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதி அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 

இந்த செயல்முறை வெளிப்படையானதாகவும், சமமானதாகவும், தேசிய பாதுகாப்புக் கருத்தில் முழுமையாக இணைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள்  வலியுறுத்தினர்.