மேற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 6 சந்தேக நபர்களையும், 335 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்
நவம்பர் 03, 2025இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். போதைப்பொருட்கலை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் 2025 நவம்பர் 02 காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, ஏனைய படையினர்,பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் உள்ளிட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து முழு நாட்டையும் உள்ளடக்கி போதைப்பொருள் கைப்பற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கையின் மேற்கு கடலில் கடற்படை நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பலால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகு போதைப்பொருள் அடங்கிய பதினாறு (16) பொதிகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.
இங்கு போதைபொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர், 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், முழு நாட்டையும் உள்ளடக்கிய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கௌரவ ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், பாதுகாப்பு அமைச்சும் பொதுப் பாதுகாப்பு அமைச்சும் கடல் மற்றும் வான் வழியாக தீவுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க ஒரு கூட்டுத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும், கடற்படை, பிற ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் ஆகியவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, நன்கு திட்டமிடப்பட்ட, கூட்டு நடவடிக்கைகளுக்கு மத்தியில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான எந்த வாய்ப்பையும் அனுமதிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின் சிறப்பு பங்களிப்பைப் பாராட்டிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், குறிப்பாக கடல் வழியாக போதைப்பொருள் வருவதைத் தடுப்பதில், தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஆதரவைக் கோரினார், மேலும் நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார், மேலும் முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டை விடுவிப்பதில் நாட்டு மக்களின் ஆசீர்வாதம் ஒரு பெரிய பலமாக இருந்தது என்றும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்களுக்கு சிறப்பு பொறுப்பு இருப்பதாகவும் கூறினார்.
மேலும்,இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு, ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை உள்ளிட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நன்றி - www.navy.lk