இலங்கையில் வான் குதிப்பு (Skydiving) நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் நோக்கில் கூட்டம் நடைபெற்றது

பெப்ரவரி 05, 2026

இலங்கையில் வான் குதிப்பு (Skydiving) செயல்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பிப்ரவரி 05) ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது, Skydiving Sri Lanka நிறுவனத்தின் பிரதிநிதிகள் வான் குதிப்பு தொடர்பான விரிவான விளக்கக் காட்சியை வழங்கியதுடன், அதைச் சாகச சுற்றுலா நடவடிக்கையாக உருவாக்குவதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் முன்மொழியப்பட்ட செயல்பாட்டு அம்சங்களை எடுத்துரைத்தனர். இலங்கையில் வான் குதிப்பை (Skydiving) ஒரு புதிய சுற்றுலா ஈர்ப்பாக மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் அது நாட்டின் சுற்றுலா துறைக்கு அளிக்கக்கூடிய பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வான் குதிப்பு (Skydiving) நடவடிக்கைகளை நாட்டில் முன்னெடுக்கும் போது எதிர்நோக்கும் சவால்களை கண்டறிவது முக்கியம் என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார். ஒழுங்குமுறை விதிமுறைகள், பாதுகாப்பு, செயல்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து விடயங்களையும் கவனமாக ஆய்வு செய்து, வான் குதிப்பு (Skydiving) செயட்பாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் மேலதிக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Skydiving Sri Lanka நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.