--> -->

இலங்கை கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்

ஜனவரி 15, 2021

இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக ஊhநைக ழக ளுவயகக  ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் 15ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடற்படையின் பிரதம அதிகாரி பதவிக்கான நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுக்கு இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வழங்கி வைத்தார். இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.