--> -->

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இடம்பெற்ற பிரார்த்தனைகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…

ஏப்ரல் 28, 2019

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு பேராயர் அதி.வண. மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற ஞாயிறு சிறப்பு பிரார்த்தனைகளில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் குண்டு வெடிப்பு இடம்பெற்ற கொச்சிக்கடை தேவாலயத்தின் முன்பாகவும் இடம்பெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து ஜனாதிபதி அவர்கள் தீபம் ஏற்றினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2019.04.28

நன்றி: pmdnews.lk