--> -->

6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை படைவீரர்களினால் அழிப்பு

மார்ச் 15, 2021

அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று (மார்ச் 14) சோதனையிடப்பட்டது.

கஞ்சா செய்கை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.