--> -->

மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

ஏப்ரல் 28, 2021

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மொனராகலை அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மேலும் பல கிராம சேவகர் பிரிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் - 19 பரவலை தடுக்கும்
தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கீழ்வரும் கிராம சேவகர் பிரிவுகள் மேலதிக அறிவித்தல் வரை தனிமைப்படுத்தபட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டம்
                          - வெல்லவாய நகரசபை பகுதி
                          - வெஹரயாய கிராம சேவகர் பிரிவு
                          - கொட்டகபொக்க கிராம சேவகர் பிரிவு
                          - புத்தள ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு


அம்பாறை மாவட்டம்
                        - உஹன குமாரிகம கிராம சேவகர் பிரிவு
   
மாத்தளை மாவட்டம்
                      - மாத்தளை அலுகொல்ல கிராம சேவகர் பிரிவு