--> -->

வார இறுதி நாட்களில் நாடுபூராகவும் பயணத் தடை

மே 12, 2021

கொவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாளை முதல் திங்கள் வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா சற்று முன் தெரிவித்தார்.

இதற்கமைய, பயணத் தடை 13ம் திகதி 11.00 மணி 17ம் திகதி அதிகாலை 04.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கவும் அத்தியவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் மேற்படி காலப்பகுதியில் அஅனுமதிக்கப்படும் என அவர் கூறினார்.