--> -->

யாழில் தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்வுக்கு இராணுவம் உதவி

ஜூன் 03, 2021

யாழ்குடாநாட்டில் 36 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட கொவிட் - 19 தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையக இராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

யாழில் சைனோபாம் தடுப்பூசி முதல் டொஸ் ஏற்றும் நிகழ்வு அமைச்சர் கெளரவ . டக்ளஸ் தேவானந்தா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட செயலாளர், யாழ் பாதுகாப்புப் படை தளபதி ஆகியோர் தலைமையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகவும் இதில் முன்னணி சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.