--> -->

சிலாபத்தில் உலர்ந்த மஞ்சள் மற்றும் வெங்காயம் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூன் 03, 2021

சிலாபம் வட்டக்கல்லிய பிரதேசத்தில் நேற்றைய தினம் 362.95 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571.4 கிலோ கிராம் வெங்காய விதை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 14 பைகளில் அடைக்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் 22 பைகளில் அடைக்கப்பட்ட வெங்காய விதைகள் இரண்டு படகுகள் மற்றும் ஒரு இலகுரக லொறி என்பவற்றுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் சிலாபம் மற்றும் பன்னல பிரதேசங்களில் வசிக்கும் 30 முதல் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் வாகனங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.