--> -->

உடனடியாக தரையிறங்கிய விமானப்படை விமானம் பாதுகாப்பாப்பாகவுள்ளது

ஜூன் 07, 2021

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சி விமானம் (செஸ்னா 150) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை , நிலாவெளி, இறக்கக்கண்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானப்படையின் சீனக்குடா விமான தளத்திலிருந்து இன்று காலை 10.22 மணியளவில் புறப்பட்ட விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 10.48 மணியளவில் தரையிறங்கியதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதன்போது விமானியும் விமானமும் பாதுகாப்பு பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.