--> -->

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் இராணுவத்தினரால் கைது

ஜூலை 05, 2021

திருகோணமலை சிற்றாறு பிரதேசத்தில் அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேர் இராணுவத்தின் உதவியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

22வது படைப்பிரிவின் கீழ் உள்ள 4வது விஷேட படையணி வீரர்கள் 15வது பீரங்கி ட்ரோன் அணியின் ஒத்துழைப்புடன் சட்டவிரோதமாக மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட மூன்று டம்ப் டிரக்குகள் மற்றும் நான்கு
படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.