--> -->

இராணுவத்தினரால் மஞ்சள் செய்கை அறுவடை

ஜூலை 08, 2021

குட்டிக்கல பிரதேசத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கை இராணுவத்தின் 1வது பொது சேவைகள் படையணி வீரர்களால் அறுவடை செய்யப்பட்டது.

தோட்ட பயிர்ச் செய்கை அமைச்சின் ஆலோசனையுடன் படையிணர் பயிரிடும் பணியைத் தொடங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பொது சேவைகள் படையணியின் கேர்ணல் கொமண்டான்ட் மேஜர் ஜெனரல் சந்தன ஹடுன்முல்லாவின் பணிப்புரைக்கமைய 1வது பொது சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி கர்னல் கமாண்டன்ட், இந்த திட்டத்தை மேற்கொண்டார்.