--> -->

சட்டவிரோத கஞ்சா செய்கை இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

ஜூலை 14, 2021

கொட்டியாகந்துர, குடாஓயா பகுதியில் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 12வது பிரிவின் படைவீரர்கள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை பிடுங்கி அழித்தொழிக்கப்பட்டது.

காட்டின் நடுப்பகுதியில் சூட்சுமமான முறையில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் இவ்வாறு பிடுங்கி அழிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குடா ஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.