--> -->

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா புதிய இராணுவ பிரதம அதிகாரியாக நியமிப்பு

ஜூலை 16, 2021

இலங்கை இராணுவத்தில் இரண்டாவது உயரிய நியமனமான இராணுவ பிரதம அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா நியமிக்கபட்டுள்ளார். ஜூலை 17ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத்தளபதியாகவும் இராணுவ மகளிர் படையணியின் கேர்ணல் நிலைக்கான கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார்.

மேலும், மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா  இலங்கை இராணுவத்தின் 58வது இராணுவ பிரதம அதிகாரி என்பது குறிப்பிடத் தக்கது.