--> -->

படையினரைதொழில்முயற்சியாளர்களாக மாற்றியமைத்தமைக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு

ஆகஸ்ட் 01, 2021

படைவீரர் ஒருவர் தனக்கு வழங்கப்படும் எந்தவொரு பணிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளதால் அவர்களால் செய்ய முடியாது என்று ஒன்றுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.

ஓய்வு பெறும் தருவாயில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் குறிப்பிட்ட அவர், சில இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் அவர்கள் பொருத்தமான நிறுவன வேலைக்கு தகுதி பெற முடியும் என்று கூறினார்.

அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்,  அறிவுள்ளவர்கள், திறமையானவர்கள், ஒழுக்கமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள், ஏனெனில் இந்த அதிகாரிகள் நாட்டில் மிகவும் ஒழுக்கமான அமைப்பில் பணியாற்றுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்..

பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டு தொழில்முயற்சியாண்மைக்கு இராணுவம் - எம்2சி எனும்; கற்கை நெறியியின் 2ம் தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனரல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஓய்வு நிலைக்குச் செல்லத்தயாராகும் முப்படைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவினரை தயார்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படைகளின் 24 சிரேஷ்ட அதிகாரிகளுக்கான சான்றிதழ்களை பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிகாரியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இலங்கையில் முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) உந்து சக்தியாக இருந்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

ஜெனரல் ரத்நாயக்கவினால் முன்மொழியப்பட்ட இந்தத்திட்டம், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படைகளின் தளபதிகளின் ஆதரவுடன் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் இருந்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிகளை, உயர் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும்  நிலைக்கு தகுதியானவர்களாத மாற்றியுள்ளது.

ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேவையான இதுபோன்ற துறைசார் அறிவை மேம்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியானவர்களாக மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக இத்துறையில் காணப்பட்ட இடைவெளியைக் குறைக்கப்பட்டமைக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

வெளியில் நிலவும் குறைவான, முறையான மற்றும் வழக்கமான வேலை அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர்,  மிகவும் ஒழுக்கமான கட்டமைப்பிற்குள் கடினமான, சவாலான சூழல்களால் வடிவமைக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் விதிகள் மற்றும் விதிமுறைகள் அவர்கள் சேவை செய்யும் எந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் திறன்களை வைக்கும் திறன் மற்றும் திறனுடன் உட்பொதிக்கப்பட்டுள்ளது என்பது எனது வலுவான நம்பிக்கை என தெரிவித்தார்.

இந்த முழு நிகழ்ச்சியை பிரத்தியேகமாக ஏற்பாடு செய்ததற்காக  பங்குதாரர்களான எக்சஸ் இன்ஜினியரிங் மற்றும் மனித வள முகாமைத்துவ சர்வதேச கற்கை நிலையம் (ஐஐஎச்ஆர்எம்) வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி கூறிய ஜெனரல் குணரத்ன, ஓய்வுபெறும் இராணுவ அதிகாரிகளை நிறுவனத் துறையில் சாத்தியமான தலைவர்களாக மாற்றுவதற்கான இந்த வகையான ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூறினார்.

இதன் வெற்றிக்கு பங்களித்த பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பங்காளிகளுக்கும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையிலும் நினைவுச் சின்னங்கள் பரிசில்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு), விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கடற்படையின் பிரதி பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் நந்தன ஜயரத்ன, எக்சஸ் இன்ஜினியரிங் தலைவர் சுமல் பெரேரா, மனித வள முகாமைத்துவ சர்வதேச கற்கை நிலைய  (ஐஐஎச்ஆர்எம்) முகாமைத்துவ பணிப்பாளர் ரஞ்ஜீவ குலதுங்க, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதி தலைவர் துமிந்த ஹ_லங்கமுவ, பெருநிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.