--> -->

சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' ஐ ஏந்திய வாகன பவனி ஆரம்பம்

ஆகஸ்ட் 08, 2021

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிரு சேய தூபியின்  ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பவற்றை  ஏந்திய வாகன பவனி பெளத்த  சமய சம்பிரதாயங்களுடன் சுபவேளையில் நாடு தழுவிய தனது பயணத்தை இன்று (ஓகஸ்ட் ,08) ஆரம்பித்தது.

இதற்கமைய, இன்றைய முதல் நாள் பவனியில், பித்தளை சந்தி, ஹார்டன் பிளேஸ், பொரெல்ல, நாரஹேன்பிட்ட வழியாக கிருலப்பனை, ஹேவலொக் டவுன், டூப்ளிகேஷன் வீதி, கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை வழியாக தெஹிவளை மற்றும் மெலிபன் சந்தி முதல் பெல்லன்வில ரஜ மகா விஹாரை  வரை பயணிக்கவுள்ளது.

புனித வஸ்த்துக்கள் அடங்கிய இந்த வாகன பவனி வண. மகா சங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் இடம்பெறவுள்ளது.

நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள வீதிகளில் வலம் வரவுள்ள இந்த வாகன பவனியின்போது போக்குவரத்தினை கையாளும் நடவடிக்கை அந்ததந்த பிரதேசத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த பவனியின்போது கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.