--> -->

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் களனி ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது

ஆகஸ்ட் 12, 2021

களனி ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து  சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி இன்று காலை   (ஆகஸ்ட், 12) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.

இதற்கமைய இந்த புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி, கல்பொரல்ல, வராகொட வீதி, தெலங்கபாத, ஏ-3 வீதி, வத்தளை, வெலிசர, ராகம, கடவத்த, கிரில்லவல, முதுன்கொட மற்றும் மிரிஸ்வத்த  வீதி வழியாக கம்பஹா சாம விஹாரையை சென்றடையவுள்ளது.

புனித வஸ்த்துக்கள் ஏந்திய இந்த வாகன பவனி வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும்  இடம்பெறுகின்றன.

மேலும், இந்த வாகன பவனியின் போக்குவரத்தினை கையாளும் நடவடிக்கை அந்ததந்த பிரதேசத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த பவனியின்போது கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.