--> -->

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று வட்டாரம ரஜமஹா விஹாரையை சென்றடையும்

ஆகஸ்ட் 17, 2021

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்றைய தினம்  (ஓகஸ்ட், 17) வட்டாரம ஸ்ரீ  அரஹந்த மலியதேவ ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.

இதற்கமைய, சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி  மஹகெலிய, பெல்லந்தெனிய, குருணாகல் மற்றும் பொல்கஹவெல பிரதேசங்களை கடந்து இன்று மாலை வட்டாரம ஸ்ரீ அரஹந்த மலியதேவ ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.

புனித வஸ்த்துக்கள் ஏந்திய இந்த வாகன பவனி வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் இடம்பெறுகின்றன.

மேலும், இந்த வாகன பவனியின் போது, போக்குவரத்தினை கையாளும் நடவடிக்கை அந்ததந்த பிரதேசத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு இந்த வாகன பவனியின்போது கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.