--> -->

ரூ. 2321 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 31, 2021

இலங்கை கடற்படையினரால்  ஆழ் கடல்களில் நடத்தப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்களுடன் பல நாள் மீன்பிடி படகில் இருந்து 290 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு  இன்று காலை (ஓகஸ்ட்,31) கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கை கடற்படை  மற்றும் ஏனைய புலனாய்வு சேவைகளின் ஒருங்கிணைந்த புலனாய்வு மூலம் கிடைக்கபெற்ற தகவலுக்கமைய, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி படகு கரையை நோக்கி செல்லும் வேளையில் சோதனையிடப்பட்டதாக  கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த  படகு,  கடந்த  ஜூலை 30ம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்கு  பயணித்திருந்தது. இதன்போது  சர்வதேச கடற்பரப்பில் வைத்து வெளிநாடுகளில் செயல்படும் கடத்தல்காரர்கள் மூலம் போதைப்பொருட்கள் குறித்த படகுக்கு எடுத்துவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார்  ரூ.2321 மில்லியனுக்கும் அதிகம் என நம்பப்படுகிறதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள், அஹுங்கல்ல, பலபிட்டிய மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31 முதல் 37 வயதுடையவர்கள் என   என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடற்படை  மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம்ஆகியன குறித்த சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நடவடிக்கை, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.