--> -->

களுத்துறை சிறைச்சாலையில் இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமரா நிறுவப்பட்டது

செப்டம்பர் 03, 2021

களுத்துறை சிறைச்சாலையில் இலங்கை இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பு கேமராக்களை நிறுவும் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவைப் பயன்படுத்தி குறித்த கேமராக்கள் பொருத்தப்பட்டு அவைகள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் சானக பிரதாபசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 11வது சமிக்ஞை படை அணி வீரர்களினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவல் இவ்வாறு நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.