--> -->

ஹொரம்புவ பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ இராணுவத்தினரால் அணைப்பு

செப்டம்பர் 12, 2021

ஹொரம்புவ தரகொட கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதையடுத்து பொதுமக்களினால் இராணுவத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இராணுவத்தினரால் குறித்த பகுதியில் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்து தீயணைப்பு நடவடிக்கைகள் மத்திய பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கமைய 121வது பிரிகேட் படைவீரர்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.