--> -->

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்

மே 31, 2022

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (31) இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.