--> -->

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

செப்டம்பர் 28, 2022

கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் (SLCG) ஆகியோர் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர்.

கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இந்த சந்திப்பு இன்று (செப். 28) இடம்பெற்றது.

இதற்கமைய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோரே பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புகள் வெவ்வேறாக இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பாதுகாப்பு உயர் அதிகாரிகளை பதில் பாதுகாப்பு அமைச்சர் வரவேற்றார்.

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்களின் போது பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை, புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றமைக்காக கடற்படை, விமானப் படைத் தளபதிகள் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அமைச்சருக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உத்தியோகபூர்வமாக வெளிநாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மையினால் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் அமைச்சில் நடைபெற்ற இந்ந சந்திப்பினை நினைவுகூரும் வகையில் அமைச்சருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.