--> -->

எரிவாயு கசிவு வெடிப்பில் இருவர் காயம்

செப்டம்பர் 15, 2019

கொழும்பு -9 தெமட்டகொடை, மஹவில வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஒன்று (செப்டம்பர் ,15) இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்ற இவ்வெடிப்பு சம்பவத்தில் வீட்டில் இருந்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.