--> -->

யாழ் தீவுப்பகுதிகளில் கடற்படையினரால் சிறுவர் முன்பள்ளிகள் நிர்மாணிப்பு

ஒக்டோபர் 24, 2019

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும்  சமூக நல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக யாழ் குடாநாட்டில்  இரண்டு சிறுவர்  முன்பள்ளிகளை நிர்மாணிப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கமைய, மண்டைத்தீவு மற்றும் புங்குடுதீவு ஆகிய தீவுகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  இரண்டு கட்டிடங்கள் அண்மையில் மாணவர்களின்  பயன்பாட்டிற்காக வழங்கிவைக்கப்பட்டன.

மண்டைத்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர்  முன்பள்ளி  செவ்வாய்க்கிழமையன்று (ஒக்டோபர், 22) மண்டைத்தீவு உதவி பிரதேச செயலகம் திரு எஸ் ராஜீவ் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட அதேவேளை,  புங்குடுதீவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர்  முன்பள்ளி  அதே தினம் வேலனை  உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜீவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும்  சமூக நல நடவடிக்கைகள்  தீவு பகுதி மக்களினால் பெரிதும் பாராட்டப்பட்டன. இக் கட்டிடங்கள் அதன் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், தேசிய நல்லிணக்க திட்டத்திற்கு அமைவாக  கடற்படையின் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.