--> -->

மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சிகள்

டிசம்பர் 14, 2019

இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை சவால்கள் போன்றவற்றின் தலைப்புகளில் இடம் பெறுகின்றன.

மேலும் இப் பயிற்சிகளுக்கான ஆரம்ப நாளில் இப் பயிற்சிகளுக்கான அடிப்படை வழிகாட்டல்கள் படையினர்களுக்கு வழங்கப்பட்டன.

இப் பயிற்சிகளில் இலங்கை மற்றும் இந்திய அதிகாரியவர்களின் திருமண ஆண்டு விழாவும் இதன் போது கொண்டாடப்பட்டது. இப் பயிற்சிகள் 2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி நிறைவு பெறவுள்ளன.

நன்றி: army.lk