பாதுகாப்பு செய்திகள்
நோயாளிகளின் நலனுக்காகப் படை வீரர்கள் இரத்த தானம்
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை இராணுவத் துருப்புக்கள் தங்களின் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம்கள்களை அண்மையில் நடத்தினர்.
பாரிஸ் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை ராணுவ வீரர் தங்கம் வென்றார்
பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற ‘லெஸ் செண்சுரீஸ் குத்துச்சண்டை சுற்றுப்போட்டி பாரிஸ்-2022’ இல் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர் லான்ஸ் கோப்ரல் பி.ஏ.ஆர் பிரசன்ன, வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.
மோசமடையும் கடல் வானிலை- வானிலை மையம்
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) விடுத்துள்ள கடல்சார் வானிலை முன்னறிவிப்பிற் கமைய அடுத்த 24 மணித்தியாலங்களில் பின்வரும் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (மே 16) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
கடற்படையினரால் நோயுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வர உதவி
கடலில் வைத்து சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், நேற்று மாலை (மே 15) இலங்கை கடற்படையினரால் சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடகங்களின்படி, உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு ‘சிந்தூர் 04’ ல் இருந்த மீனவர் ஒருவர் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் இருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விதவை ஒருவருக்கு இலங்கை இராணுவத்தினரால் புதிய வீடு
யாழ்ப்பாணத்தில் விதவை ஒருவருக்காக புதிய வீடொன்ரை நிர்மாணிக்க வேண்டி அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இலங்கை இராணுவத்தின் சமூகநல திட்டத்தின் ஒரு அங்கமாக
வெல்ல அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்க கடற்படை நிவாரண குழுக்கள் தயார்நிலையில்
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ள நிலையில், வெல்ல அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்குமுகமாக இலங்கை கடற்படையினர் 10 நிவாரண குழுக்களை மேட்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஈடுபடுத்தியுள்ளது.
ஊடக அறிக்கை
2022 மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பகுதிக்கு 150 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யும் - வானிலை மையம்
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னாரில் இராணுவப் படையினர் இரத்ததானம்
மன்னார் வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னார் மாத்தோட்ட ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற இரத்த தான முகாம் ஒன்றின் போது, இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (மே 12) பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனுகஹவெவ மாதிரி கிராமத்தை பாதுகாக்க யானை வேலி
கனுகஹவெவ மாதிரி கிராமத்தில் இலங்கை விமானப்படையினரால் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 14 கிலோமீற்றர் நீளமான யானை வேலி மே மாதம் 10 ம் திகதியன்று அம்மக்களுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
சட்ட விரோத செயல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்
தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் தீ வைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக எந்தவொரு அரசியல் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தனர்.
ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, செவ்வாய்கிழமை (மே 10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்களை மீண்டும் நியமித்துள்ளார்.
ஊடக அறிக்கை
கொழும்பு, காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்குடன் பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் பூங்கா அன்பளிப்பு
யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கோப்பாய் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் அன்பளிப்பாக வழங்கிய சிவில்-இராணுவ ஒத்துழைப்பு (CIMIC) பூங்கா நேற்று (மே 8) பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.
சர்வதேச கடற்பரப்பில் பெருமளவான போதைப் பொருட்களை கடற்படையினரால் பைப்பற்று
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோ கிராம் போதைப் பொருட்கள் இலங்கை கடற்படையினரால் (SLN) தெற்கு பிராந்தியத்திற்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடலோர காவல்படை JICA மற்றும் JCG உடன் பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) இடையே, பேரிடர் தணிப்பு மற்றும் கடல் சூழல் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு மேம்பட்ட எண்ணெய் கசிவு சம்பவ மேலாண்மை பயிற்சி திட்டத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல் பதிவு சமீபத்தில் இலங்கை கடலோர காவல்படை நிலையம் வருணா வில் கைச்சாத்திடப்பட்டது.