பாதுகாப்பு செய்திகள்
இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாணவ படையணியினருக்கு தலைமைத்துவப் பயிற்சி
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 50 யாழ்ப்பாண பாடசாலை மாணவ படையணியினருக்கு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் தல்செவன விடுமுறை விடுதியில் நடைபெற்றது.
அவசரகால நிலை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
ஒரு தொகை சட்டவிரோத சுறா மீன் பாகங்கள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்று
இலங்கை கடலோர காவல்படையினர், நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட சுறா மீன் பாகங்களுடன் ஆறு மீனவர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
வத்தளையில் மூன்று கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க இலங்கை கடற்படை உதவி
வத்தளை, எலகந்தவில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மூன்று ஜவுளிக் கடைகளில் இன்று (மே 06) காலை ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படையினர் அணைத்துள்ளனர்.
இலங்கை கடலோர காவல்படையினர் கடல் ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்தனர்
இலங்கை கடலோரக் காவல்படையினரால் ஒரு தொகை கடலாமை குஞ்சுகள் அண்மையில் காடலில் விடுவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பட்டிருந்த இரத்தத்தை வழங்கவென மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தினால் இரத்ததான முகாமொன்று நேற்றைய தினம் (04) நடாத்தப்பட்டது.
மற்றுமொரு முன்னாள் போராளிக்கு இராணுவத்தினரால் வீடு நிர்மாணம்
யாழ்ப்பாண குடாநாட்டில் மிகுந்த கஷ்டத்திட்கு மத்தியில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி ஒருவருக்காக புதிய வீடொன்றை நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் பருத்தித்துறை, புலோலியில் வசிக்கும் முன்னாள் போராளிக்கான உத்தேச வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளதாக இலங்கை இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (மே 04) நண்பகல் 1200 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மே தின வாழ்த்துச் செய்தி
உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.
திவுலபிட்டிய வைத்தியசாலை வார்ட் இராணுவத்தினரால் புனரமைப்பு
திவுலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பழுதடைந்திருந்த கோவிட் 19 வார்ட்டின் புனரமைப்புப் பணிகளை இலங்கை இராணுவம் நிறைவு செய்து, வைத்தியசாலை அதிகாரிகளிடம் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளித்தது.
இலங்கையில் உள்ள ‘அவுஸ்திரேலிய இல்லத்தில்’ 107வது (அன்சக் போர்வீரர் நினைவேந்தல் நடைபெற்றது
ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ராணுவப் படைகளின் (அன்சக்) 107வது ஆண்டு நினைவு தினம் நேற்று (ஏப்ரல் 25) ‘ஆஸ்திரேலியா இல்லத்தில்’ நடைபெற்றது.