பாதுகாப்பு செய்திகள்
மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் உறவுகளை வலுப்படுத்தும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்
ஜெனரல் சேர் ஜான் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் (NDUM) இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டது. இதன்போது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் (HDUCIM) ஆகியவற்றில் கலந்துக்கொள்வது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் சேவையை நிறைவு செய்யும் அதன் கட்டளை தளபதி செயலாளரை சந்திப்பு
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் (DSCSC) சேவையை நிறைவு செய்து விடைபெறும் அதன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.
மழையுடனான வானிலை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டல தாழமுக்கம் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று (ஜூன் 17) முழுதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இப்னே பஸால் ஷெய்குஸ்ஸமான் அவர்கள் இன்று (ஜூன் 15) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியால் (SLCOMM) மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் (ஜூன் 13) சீதூவையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டது.
16 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பில் சிக்கிய பயணிகள் பேருந்து
சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (ஜூன் 15, 2006) அரச பேரூந்து ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 64 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அரசுப் பேருந்தை குறிவைத்து இரண்டு கிளைமோர் கண்ணிவெடிகள் வெடித்ததினால் கொல்லப்பட்டவர்களில் 15 குழந்தைகளும் உள்ளடங்கி இருந்தனர். இந்நாள்(ஜூன் 15) ...
கிழக்கில் இலங்கை இராணுவப் படையினர் இரத்ததானம்
அண்மையில் பொத்துவில் முஹுதுமஹா விகாரையில் நடத்தப்பட்ட இரத்த தானப் முகாமில் இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.
இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலரை சந்தித்தார்
இலங்கையில் உள்ள இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட், ஜூன் 09, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
மேலும் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலோர காவல்படையால் கடலுக்கு விடுவிப்பு
இலங்கை கடலோரக் காவல்படையினரால் அண்மையில் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது. கடலோர காவல்படை செய்திகளின் படி, கடலோர காவல்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் (CGTCP) கீழ் பாதுகாக்கப்பட்ட 237 ஆமை முட்டைகள் கொண்ட கூட்டிலிருந்து வெளிவந்த 206 ஆமை குஞ்சுகள் இவ்வாறு கடலில் விடுவிக்கப்பட்டன.
ஜனாதிபதி அவர்களின் பொசான் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி
புதிய அர்த்தமுள்ள அடையாளத்தையும் கலாசார மறுமலர்ச்சியையும் உருவாக்கிய, மஹிந்த தேரரின் வருகை இடம்பெற்ற பொசன் நோன்மதி தினம் என்பது இலங்கையில் நாம் என்றென்றும் கௌரவத்துடன் நினைவுகூரக்கூடிய ஒரு பெறுமதியான நாள் ஆகும்.
தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில்
இலங்கை இராணுவம் பல பதக்கங்களை வென்றது
46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர்.
மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி இலங்கை படை முகாமுக்கு விஜயம்
மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கொர்னெலிஸ் ஜோஹன்னஸ் மத்திஜ்சன் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை அமைதிகாக்கும் படை முகாமுக்கு அண்மையில் விஜயம் செய்தார்.
நெதர்லாந்தில் நடந்த இராணுவ குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை வீரருக்கு வெள்ளிப்பதக்கம்
நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது.
அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் தலைமையில் திருகோணமலை கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கை
ரணவிரு சேவா அதிகார சபையின் கிழக்கு மாகாண கிளை மற்றும் திருகோணமலை மாவட்ட கடல்சார் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து "தூய்மையான கரங்களால் தூய்மையான நாட்டை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் அண்மையில் சுற்றுப்புற சூழல் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை "பழைய ஜெட்டி" கடற்கரையில் நடைபெற்றது.
அஹங்கமை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இலங்கை விமானப்படை உதவி
குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அஹங்கம கொரஹெதிகொட சுனாமி கிராம மக்களுக்காக கொக்கலை விமானப்படை நிலையத்தினால் விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையுடன் அப்பிரதேசத்திற்கான நீர் விநியோக திட்டம் மறுசீரமைக்கப்பட்டு அண்மையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு ஜூன் மாதம் 8ஆம் (2022) திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினருக்கான புதிய தங்குமிட விடுதித் தொகுதி திறந்து வைப்பு
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் சேவையாற்றும் இராணுவத்தினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட விடுதித் தொகுதியை இன்று (08) திறந்து வைத்தார்.
கடலோர காவற்படை யினரால் மற்றொரு தொகுதி கடலாமை குஞ்சிகள் கடலில் விடுவிப்பு
கடலோர காவல்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் பல இடங்களில் அடைகாக்கப்பட்ட 222 முட்டைகளிருந்து பொரித்த நூற்று முப்பத்து நான்கு (134) கடலாமை குஞ்சுகள் சமீபத்தில் கடலில் விடப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.