பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் 'சிறிமா மியூரசி - 2024' கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டனர்

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன  கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நடைபெற்ற  "சிறிமா மியூரசி - 2024" இசை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இன் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வியாழக்கிழமை (செப். 19) நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சைபர் மோசடி மையங்கள் மற்றும் மனித கடத்தல் குறித்து
NAHTTF அவசர எச்சரிக்கை விடுக்கிறது

மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களுடன் தொடர்புடைய குற்றச்செயல்களிள் அதிகரிப்பு குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித கடத்தல்காரர்கள் இளம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை குறிவைத்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் தருவதாக கோரி ஆட்களை கவர்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (செப். 18) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கேர்ணல் நளின் ஹேரத் இந்தியாவின் புத்தகயா-நாளந்தா பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் எதிர்காலம் முனைப்பு மாநாட்டில் உரையாற்றினார்

சினெர்ஜியா அறக்கட்டளை, நாளந்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதி (2024) வரை பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அறிமுக போத்கயா-நாளந்தா முனைப்பு மாநாட்டை நடத்தியது. இந் நிகழ்வு இந்தியாவிள் புத்த பெருமான் ஞானம் பெற்ற இடமான புத்தகயா மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அதன் 18 வைத்து ஆண்டு
நிறைவை கொண்டாடியது

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் 9CSD) அதன் 18 வைத்து ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 13) கொழும்பில் உள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை இராணுவத்தின் (SLA) புதிய பிரதம அதிகாரியாக இலங்கை இராணுவ சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மியான்மரில் பலவந்தமாக சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடுத்த மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 20 பேர் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) ஆல் மீட்கப்பட்டனர்

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) ஒரு வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு சைபர் குற்றங்களில் ஈடுபடும் ஒரு குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் மியான்மரில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருந்த 20 இலங்கையர்களை மீட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘ராஜாலி சந்தேசய’; ஜெனரல் கமல் குணரத்னவின் 10வது இலக்கிய படைப்பு வெளியிடப்பட்டது

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட 2579 கவிதைகளைக் கொண்ட இலங்கையின் இலக்கிய வரலாற்றில் மிக நீளமான கவிதை தொகுப்பான ‘ராஜாலி சந்தேஷய’ நேற்று மாலை (செப்டம்பர் 06) நெலும் பொகுண திரையரங்கில் வெளியிடப்பட்டது. அவரது பிறந்த தினமான நேற்று இவ்வெளியீட்டு விழா நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கூட்டத்தில்
பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்

கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை மாலை (செப் 02) நடைபெற்ற இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) பழைய மாணவர் சங்க ஒன்றுகூடலில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்
வெள்ளிப் பதக்கம் வென்றார்

பாரிஸ் பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை இராணுவத்தின் வாரண்ட் அதிகாரி II சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். திங்கட்கிழமை (செப். 02, 2024) நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தடகள வீரர் தனது பிரிவில் 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக இலங்கை இராணுவ ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அபேக்ஷா மருத்துவமனையில் இலங்கை விமானப்படை நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிறுவர் வார்ட் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை விமானப்படையின் (SLAF) தொழில்நுட்ப மற்றும் மனிதவள நிபுணத்துவத்துடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி சிறுவர் வார்ட் செவ்வாய்கிழமை (செப் 03) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, ரூ. 150 மில்லியன் செலவில் ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் நிதியுதவியுடன் ‘ஹுஸ்ம’ திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இக்கட்டிடத் தொகுதி ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழு
இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு

இந்திய அரச இணைச் செயலாளர் ஸ்ரீ விஜய் நெஹ்ரா (IAS) தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) குழுவொன்று, இன்று (செப். 2) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுர பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ‘சிமிக் பார்க்’ மற்றும் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

இலங்கை இராணுவத்தால் நிறுவப்பட்ட ‘சிமிக் பார்க்’ கிளிநொச்சி" கடந்த 25 (ஆகஸ்ட்) திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சி மக்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காகவும் இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகில் இருந்த 02 மீனவர்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது

இலங்கைக்கு வடக்கு பகுதியில் கச்சத்தீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 14 கி.மீ) தொலைவில் இந்திய கடற்பரப்பில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றில் இருந்து 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27 ஆகஸ்ட் 2024) மீட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக
ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நியமித்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இது தொடர்பான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சைபர் பாதுகாப்பு கட்டளை பிரிவின் ‘ஏஜிஸ் லெக்சிகன் 2024’ நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெளியுறவு அமைச்சகத்தில் நடத்தப்பட்டது

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு சைபர் கட்டளை பிரிவின், ஏஜிஸ் லெக்சிகன் 2024 - சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற தொனிப்பொருளில் நடந்து வரும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரின் மூன்றாவது அமர்வு சமீபத்தில் (ஆகஸ்ட் 24) வெளியுறவு அமைச்சகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி வெற்றி

2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற 4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பயிலிளவல் சதுரங்கனி பங்கேற்று, நீளம் பாய்தல் போட்டியில் 5.24 மீட்டர் சாதனையுடன் வெற்றி பெற்றார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'மித்ர சக்தி' - 10 கூட்டு இராணுவப் பயிற்சி மாதுரு ஓயாவில் நிறைவு

பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் இறுதி இராணுவப் பயிற்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன்னிலையில் மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.