பாதுகாப்பு செய்திகள்
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி நிர்மாண பணிகளை பாதுகாப்பு செயலாளர்ஆய்வு செய்தார்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி மாணவர் விடுதி கட்டிடத்தை பார்வையிடுவதற்காக இன்று (ஆகஸ்ட் 06) ஸ்தல விஜயமொன்றை மேற்கொண்டார்.
மியன்மாருக்கு சட்டவிரோதமான வழிகளில் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
மியன்மாருக்கு சட்டவிரோதமான வழிகளில் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியன்மாருக்கு வேலைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை அரசாங்கம் கடுமையாக அறிவுறுத்துகிறது.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுனவத்தின் ஊழியர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுனவத்தின் சேவையாற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் நேற்று (ஜூலை 31) பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் இடம்பெற்றது.
யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது
யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் அதிகபட்ச நீதியை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் நீரியல் ஆய்வை விரிவுபடுத்துவதற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த Multi Beamer Echo Sounder உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவிப்பு
அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய உதவிச் செயலாளர் திருமதி கரேன் ராட்போர்ட் அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஜூலை 30) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
சீன மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில் கொண்டாடப்பட்டது
இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (ஜூலை 29) கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் மியன்மார் பிரதமரை சந்தித்தார்
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, மியன்மார் அரச நிர்வாக சபையின் தலைவரும் அந்நாட்டின் பிரதமருமான சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை ஜூலை 26 மியன்மார் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்களின் முன்னோடி திட்டமாக ரூபா. 23.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட தம்புள்ளை ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடம் கையளிப்பு
புதிதாக புனரமைக்கப்பட்ட தம்புள்ளை ஆரம்ப வித்தியாலயம் (ஜூலை 22) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது மாணவர்களின் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அங்கவீனமுற்ற படைவீரருக்கு மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டது
அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவருக்கு புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று இன்று (ஜூலை 22) வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் அங்கவீனமுற்ற படைவீரர் HBMR ஆரியரத்னவிற்கு இம்மின்சார முச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.
ஸ்விட்சர்லாந்து தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Francois Garraux இன்று (ஜூலை 22) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை தனது பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 'சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி' வளாகம் தம்புள்ளையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு உப கிளையாக தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ள 'சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி' வளாகத்தின் திறப்பு விழா நிகழ்வு இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இராணுவ கவசப் படையணின் "Armour Symposium -2024" பாதுகாப்பு செயலாளர் தலைமையில் இடம்பெற்றது
இலங்கை இராணுவ கவசப் படையணின் ஏற்பாட்டில் இன்று (ஜூலை 19) கொழும்பு ரொக் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற “Armour Symposium -2024” இல் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் எண்ணக் கருவுக்கு அமைய, இளம் வீரர்களை கௌரவித்து, ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணியின் தேசிய இளைஞர் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி
பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர்
இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.
சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க லாஹுகல நீலகிரி தூபியில் புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
லாஹுகலவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி தூபியில் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (ஜூலை 15) காலை நடைபெற்றது.