செய்திகள்
கப்பல் கழிவுகள் தொடர்பில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நாளை முதல் கண்காணிப்பு
இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது, இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து நாட்டில் கப்பல் கழிவுகள் தொடர்பில் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
அங்ககவீனமுற்ற இராணுவ வீரருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு பாதுகாப்பு செயலாளரால் கையளிப்பு
குருணாகல் கொகரெல்ல பகுதியில் அங்ககவீனமுற்ற இராணுவ வீரர் ஒருவருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றினை பாதுகாப்பு செயலாளர் இன்று (ஜூலை, 4 ) வழங்கிவைத்தார்.
என் டீ சீயின் புனர்நிர்மான பணிகளை பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கல்வித் திட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (03) அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய பாதுகாப்பு செயலாளர் உறுதி
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு இன்று (ஜூலை 1) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, தேவாலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்த துரித நடவடிக்கை எடுத்ததாகவும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த தேவாலயத்தின் எஞ்சிய புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
பாதாள உலகு, போதைப் பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்க உயர் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் அது அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களுக்காக வளிமண்டல திணைக்கத்திற்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு
துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை வழங்குவதற்காக புதிய உபகரணங்கள், பகுப்பாய்வு மென்பொருள் மற்றும் புதிய அமைப்புகள் என்பன விரைவில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
கடமைக்கப்பால் தம் திறமையை வெளிக்காட்டிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன கடமை நேரத்தில் தமது திறமையை சிறப்பாக செயல்படுத்திய நான்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவிலியன் ஒருவருக்கும் பணப்பரிசு உட்பட பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இலங்கையில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கருணாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை.
கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னால் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி யுத்த காலத்தில் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக.
பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் - பாதுகாப்பு செயலாளர்
சிறைச்சாலைகளில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் தண்டனை பெற்ற பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன எச்சரிக்கை விடுத்ததோடு சிறைச்சாலைகளில் உள்ள பாதாள உலக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கெதிராக சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப் படை வீரர்கள் உள்ளடங்கலான பொலிஸ் அதிகாரிகளை நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய பாதுகாப்பு செயலாளர் யாழ் விஜயம்
வடக்கில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு படையிரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தெடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழிற்கான விஜயம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டார்.
கொரோனா வரைஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் புகழிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் வகையில் கடற்படை விழிப்புடன்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை பல்வேறு கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொரோனா வரைஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புகழிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார இன்று (16) தெரிவித்தார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் சட்டநடவடிக்கை
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் துவான் சலே கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவையை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீளஆரம்பிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத்தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை இன்று (ஜூன், 15 ) சந்தித்துள்ளார்.
ஹேய்லீஸ் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு துணிகள் அன்பளிப்பு
வரையறுக்கப்பட்ட ஹேய்லீஸ் குழுமத்தினால் நிருவகிக்கப்படும் தனியாருக்கு சொந்தமான முன்னணி ஹேய்லீஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடம் ஒரு தொகை துணி வகைகளை அன்பளிப்பு செய்துள்ளது.
Tamil
Tamil
எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் நிலையத்தினால் ரிமோட் மூலம் இயங்கும் கிருமி தொற்று நீக்கும் ரோபோ அன்பளிப்பு
மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் பொறியியலாளர்கள் குழுவினர் பொது இடங்களில் புற ஊதாகதிர்வீச்சை பயன்படுத்தி கிருமி தொற்று நீக்கம் செய்யும் ரோபோ ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
Tamil
இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை - பாதுகாப்பு செயலாளர்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கிழக்கில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் ஜனாதிபதி செயலணி பாதுகாக்கும் - பாதுகாப்பு செயலாளர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டுகோள்
இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் தமது நாடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன்னரான 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளையே அவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.











.jpg)












