செய்திகள்
புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடற்படையினர் உதவி
புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய மின்கி இனத்தைச் சார்ந்த திமிங்கலம் ஒன்று இலங்கை கடற்படையினரின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) பாதுகாப்பாக கடலுக்குள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் புத்தகங்கள் அன்பளிப்பு
மாங்குளம் மகா வித்தியாலயம் மற்றும் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் றோயல் கல்லூரியின் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் நூலகப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டனர்.
Tamil
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம்
திருகோணமலையில் விபத்துக்குள்ளானது
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று (ஆகஸ்ட் 8) திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது.
இராணுவத்தினரால் யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில்
ஏற்பட்ட தீ விபத்து அணைக்கப்பட்டது
கிளிநோச்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 04) மாலை வேகமாகப் பரவி வந்த பெரும் காட்டுத்தீயை இலங்கை இராணுவத்தினர் அணைத்துள்ளனர்.
மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ
மற்றும் அணியினருக்கு நினைவஞ்சலி
மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவமற்றும் அவரது குழுவினரான மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜிஎச் ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கொமான்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கொமான்டர் சீபி விஜேபுர, மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்கிரமசிங்க ஆகியோருக்கு 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள புனித தெரேசா தேவாலயத்தில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 3) விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.
நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு அழைத்து வந்த இலங்கை கடற்படை படகு
பல நாள் மீன்பிடி படகொன்றில் சுகவீனமுற்றிருந்த உள்ளூர் மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடக தகவல்களுக்கமைய, குறித்த மீனவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) கலமெட்டிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'வர்ஷன் புத்தா 03' (பதிவு எண். IMUL-A-0872 MTR) என்ற பல நாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றுள்ளார்.
வத்தளை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி
வத்தளை, பள்ளிய வீதியிலுள்ள வீடொன்றில் இன்று (2023 ஆகஸ்ட் 01) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை கட்டுபடுத்தி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கடற்படையினர் உதவி வழங்கினர்.
Tamil
Tamil
இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Khanjar’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூலை 29) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் மீண்டும் வலியுறுத்தல்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவு குருநாகல் மாவட்டத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜூலை 28) மீண்டும் வலியுறுத்தினார்.
விஷேட அதிரடிப் படைக்கு ஐ.நா. பணிகளுக்கான இராணுவத் தயாரிப்பு
வாகனங்கள் வழங்கல்
இராணுவத்திற்கு ‘சாத்தியமில்லாதவை ஏதுமில்லை’ என்பதை நிருபிக்கும் வகையில் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் படையினர் நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பேரில் ஐ.நா பணிக்காக பயன்படுத்துவதற்கான இராணுவத்தினரினால் தயாரிக்கப்பட்ட 6 வாகனங்கள் விஷேட அதிரடி படையினருக்கு கையளிக்கப்பட்டன.
உடையார்கட்டு வறிய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்
உடையர்கட்டு சுதத்திபுரம் காலனியில் வசிக்கும் கூலித்தொழிலாளியான திரு விஜயகுமார் தனுஷனின் குடும்பத்திற்கு இலங்கை இராணுவம் புதிய வீடொன்றை நிர்மாணித்து அதனை பயனாளியிடம் கையளித்தது.
இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா உண்மையான நண்பனாக எங்களுடன் இருந்தது - பாதுகாப்பு செயலாளர்
“சர்வதேச ரீதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, சீனா உண்மையான நண்பனாக இருந்து எங்களுடன் தோளோடு தோள் நின்று, எங்களுக்குத் தேவையான பரிந்துரைகளையும் ஆதரவையும் வழங்கியது”
எல்ல பகுதியில் ஏற்பட்ட தீயினை விமானப்படையினர் அணைத்தனர்
கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பதுளை மாவட்டத்தின் எல்ல பகுதியில் நேற்று (ஜூலை 23) ஏற்பட்ட தீ இலங்கை விமானப்படை (SLAF) பெல் 212 உலங்குவானூர்தியின் மூலம் அணைக்கப்பட்டது.
சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்துடன் இணைந்து கடற்படையால் சதுப்புநில நடவு திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது
ஜூலை 26 ஆம் திகதி ஈடுபட்ட சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து, 2023 ஜூலை 14 மற்றும் 21 ஆம் திகதிகளில் கல்பிட்டி கப்பலாடி பிரதேசத்திலும் மல்வத்துஓய முகத்துவாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சதுப்புநில மர நடுகைத் திட்டமொன்றை கடற்படையினர் மேற்கொன்டனர்
சீனாவில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட் -2023’ துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு ‘சிறந்த குழுப்பணி’ விருது
சீனாவின் உரும்கியில் சீன மக்கள் ஆயுதப் பொலிஸ் (PAP) படையின் பயிற்சி தளத்தில் ஜூலை 9-16 திகதிகளில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட்-2023’ சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு சிறந்த குழுப்பணிக்கான விருது வழங்கப்பட்டது.
ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ
பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தனர்
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) பிரதிநிதிகள் குழுவொன்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
துருக்கி தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்
இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் அதிமேதகு டமெட் ஷெகர்ஜியளு, பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'SAMIDARE (DD-106) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'SAMIDARE (DD-106) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (ஜூலை 20, 2023) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுப்படி வரவேற்றனர்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அச்சுறுத்தல் தொடர்பான சிவில் விமானப் போக்குவரத்து அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கை சமர்பிப்பு
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் (JIA)அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை சிவில் விமானப் போக்குவரத்து அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழு (CATAC) இன்று (ஜூலை 19) தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தது.
விடைபெற்றுச் செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள, திரு.வினோத் குரியன் ஜேக்கப் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
இலங்கை விமானப்படையினரால் இரணைமடுவில்
விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுப்பு
இரணைமடு பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அண்மையில் கிளிநோச்சி கல்மடுநகர் ஆரம்பப் பாடசாலையில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் மற்றும் பிள்ளைகளுக்கான பாடசாலை சீருடைகள் இலங்கை விமானப்படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.
ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை
இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் சாதனை
தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளனர்.