--> -->
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் நேற்று மாலை (ஒக்டோபர்,13) ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலமர்வில் விஷேட பேச்சாளராக இந்திய நாடாளுமன்றஉறுப்பினரும் கல்வியியலாளருமான கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.
Tamil
ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தலைமையிலான உயர் மட்ட தூதுக் குழு நாளை (ஒக்டோபர், 12) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
அபாயகரமான சரக்குகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் கப்பல்களின் நுழைவு, வெளியேற்றம், மீள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மஹர, பக்மீகஹவத்தை பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 10) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த சில காலங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் அதிகாரியாக சேவையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பளிப்பதற்காக (ஒக்டோபர் 10) சாலியபுரவிலுள்ள “கஜபா இல்லம்” விழாக்கோலம் பூண்டிருந்ததோடு இராணுவ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருவலகஸ்வெவ, ரஜவிகம பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 09) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் என்பனவற்றை மீளாய்வு செய்யும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் (ஒக்டோபர், 09) நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் அரச வைத்தியசாலைளில் பயன்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரிடம் நேற்று (ஒக்டோபர், 06) கையளிக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைபுதுப்பிப்பதற்கான திகதிகளை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.
சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கோஸ்டிகளும் தங்களது வலையமைப்பின் செயற்பாடுகளை சிறைகளுக்குள் இருந்தவாறு தொடர்ந்து முன்னெடுக்க அனுமதித்தல் அல்லது அவர்களின் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்தல் என்பது சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, அதுஇந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பொதுமக்களின் வழிபாடுகளுக்காக வழங்கப்படுவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புக்களை முடக்குவதற்காக இலங்கை அரசசு பாதுகாப்பு அமைச்சினூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
170 கிலோ 866 கிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றினை இலங்கை கடற்படை கைப்பற்றியதுடன் அதனை இன்று காலை (செப்டம்பர், 18) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்தது.
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனது விவசாயத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள சிவில் பாதுகாப்புப்படை திணைக்களம் இன்று (செப்டம்பர், 13) அதன் 15 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
தொற்றுநோய் நிலைமைகள் தொடர்கின்ற போதிலும் தேசத்தினை நெருக்கடி நிலைக்குள்ளாக்காமல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய ஸ்திரதன்மை அடைய நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (செப்டம்பர்,09) தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு ஜனாதிபதியின் பிரதிநியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இலங்கையின் தென் பிராந்தியத்திற்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து சுமார் ரூ.3,100 மில்லியன் ரூபா பெறுமதியான 336 கிலோகிராம் ஹெராேயின் போதைப்பொருளை கொண்டு வந்த வெளிநாட்டு மீன்பிடி படகினை இன்றைய தினம் (செப், 04) கைப்பற்றிய இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகளுக்கு ஜனாதிபதி பாராட்டுக்களை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.