செய்திகள்
இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் கொதாரி கட்சுகி அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார். கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை பாதுகாப்பு படை குழு லெபனானில் ‘ஸ்டீல் ஸ்ரொம் I - 2023’ பயிற்சியில்
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைப் பிரிவுகள் மற்றும் லெபனான் ஆயுதப் படைகள் ஆகியன இருவருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் ஸ்டீல் ஸ்ரொம் பயிற்சி I – 2023 லெபனானில் உள்ள சவுத் நகோரா முகாமின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி நிலையத்தில் ஜூன் 05-09 வரை ஐநா வழிகாட்டுதல்களுக்கு அமைய தீ ஆதரவு நடைமுறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து பதில்
பாதுகாப்பு அமைச்சர் ஆசி பெற்றார்
பதில் பாதுகாப்பு அமைச்சர், கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் திங்கட்கிழமை (19) மாலை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
கதிர்காம பாத யாத்திரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இலங்கையின் பாரம்பரிய கதிர்காமம் பாத யாத்திரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஐந்தாவது தடவையாக கடந்த ஞாயிறன்று (ஜூன் 11 ) கலந்துகொண்டார்.
இராணுவத்தினரால் நந்திக்கடல் பகுதியில் சதுப்புநில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் முன்னெடுப்பு
அண்மையில் ‘உலக சமுத்திர தினத்தை’ ஒட்டி முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள நந்திக்கடல் களப்பை அண்டியுள்ள சதுப்புநிலங்களில் இலங்கை இராணுவப் படையினரால் சதுப்பு நில தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் சனிக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்டது.
பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேகாலை மாவட்டத்தில் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை மற்றும் இதே மாவட்டத்தில் உள்ள எட்டியந்தோட்டைக்கு 2ஆம் நிலை எச்சரிக்கையிணையும் விடுத்துள்ளது.
ஜின் கங்கையில் அடைப்பட்ட தடைகளை கடற்படையினர் அகற்றினர்
பருவமழை காரணமாக பல நதிகள் மற்றும் நீரோடைகளின் நீரோட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் வெல்ல நீருடன் அடித்து வரப்படும் பெருமளவிலான குப்பைகள் பாலங்கள் மற்றும் குறுகிய இடங்களுக்கு கீழே அடைப்பட்டு ஆற்றின் சீரான நீரோட்டத்தை பாதிப்பதுடன் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை அகற்றி கின்னஸ் சாதனை படைத்த இராணுவ மருத்துவர்கள்
உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சிறுநீரகக் கல்லை (கல்குலி) அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் பணி வியாழக்கிழமை (ஜூன் 1) கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இடம் பெற்றது. இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தது. கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர் சிறுநீரக மருத்துவ நிபுணர் லெப்டினன் கேணல் (வைத்தியர்) கே. சுதர்ஷன், கெப்டன் (வைத்தியர்) டபிள்யூபீஎஸ்சி பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமாஷா பிரேமதிலக ஆகியோருடன் சத்திரசிகிச்சையில் முன்னெடுத்தார். கேணல் (வைத்தியர்) யூஏஎல்டீ பெரேரா மற்றும் கேணல் (வைத்தியர்) சிஎஸ் அபேசிங்க ஆகியோரும் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து நிபுணர்களாக உதவினர்.
Tamil
தேசிய கட்டிட ஆராயிச்சி நிறுவனம் இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, எட்டியாந்தோட்ட, தெஹியோவிட்ட பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல மற்றும் கலவான பிரதேசங்களுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
10 வது Damso சர்வதேச செஸ் விளையாட்டு போடியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட 10 வது Damso சர்வதேச செஸ் சம்பியன்ஷிப் போட்டியில், அரச மற்றும் வர்த்தக சேவை அணி பிரிவில் இலங்கை இராணுவ அணி அண்மையில் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
நாட்டிற்குள் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு
வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் பங்குதாரர்களுடனான செயலமர்வு அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் இராணுவம் பயன்படுத்திய காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, மட்டக்களப்பு, சித்தாண்டியில் 4 வது கெமுனு ஹேவா படையணியினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 8.6 ஏக்கர் காணியை செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) கிழக்குப் பாதுகாப்புப்படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் விடுவிக்கப்பட்டது.
Tamil
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு அணுகல், தேடுதல் மற்றும் கைப்பற்றல் நுட்பங்கள் பற்றிய பிராந்திய பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினால் திருகோணமலை, விசேட படகுகள் படையணி தலைமையகத்தில் மற்றும் சோபர் தீவில் நடத்தப்பட்ட கப்பல்களுக்கு நுழைவு, தேடுதல் மற்றும் கைப்பற்றும் நுட்பங்கள் தொடர்பான பிராந்திய பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அதன் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு 2023 ஜூன் 09 ஆம் திகதி விசேட படகுகள் படையணியின் நிர்வாக அதிகாரி கமாண்டர் பிசிபிஏ லியனகே தலைமையில் திருகோணமலை மலிமா சோபர் தீவு உணவகத்தில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் சுவிஸ்லாந்துக்கு இடையிலான இராணுவ
ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்படும்
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ் அவர்கள் இன்று (ஜூன் 09) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கையில் கடல்சார் பயிற்சிக் கல்லூரி அமைப்பது குறித்து பிரான்ஸ் தூதுவருடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்
இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.
இலங்கையின் பாதுகாப்புப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுடன் மேம்படுத்துவது இன்றியமையாதது - இராஜாங்க அமைச்சர் தென்னகோன்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளினால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு படகு நுழைவாயிலில்
விபத்துக்குள்ளான படகில் இருந்து 38 பேர் மீட்பு
யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த 38 பேர் கொண்ட ஒரு குழுவை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை (ஜூன் 07) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்
மூலோபாய மதிப்பீட்டிற்கான மையம் நிறுவப்பட்டது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடம் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மூலோபாய மதிப்பீட்டு மையமொன்றினை செவ்வாய்கிழமை (ஜூன் 06, 2023) ஆரம்பித்துள்ளது.
பருவ மழை தொடங்கும் நிலையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
நாடு பூராகவும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாலும், மழைவீழ்ச்சி அதிகரிப்பதாலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.