--> -->

தனிமைப்படுத்தல் செயல்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 300 பேர் தமது இருப்பிடங்களுக்கு அனுப்பிவைப்பு

மார்ச் 28, 2020

14 நாள் தனிமைப்படுத்தல் செயல்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 300 பேர், இலங்கை இராணுவத்தினரால்  நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து  தமது இருப்பிடங்களுக்கு  இன்று (மார்ச், 28 )அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட  நிலையங்களில் இருந்து  அவர்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இலங்கை இராணுவத்தினால் செய்து கொடுக்கப்பட்டது.