--> -->

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானங்களை தூய்மையாக்கும் பணியில் இலங்கை விமானப்படையினர்

ஏப்ரல் 03, 2020

இலங்கை விமானப்படை (SLAF) இரசாயன உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிபொருள் பிரிவு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்களை தூய்மையாக்கும் நடவடிக்கைகளை இன்றைய தினம் மேற்கொண்டது.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்ல உள்ள விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் சிவில் ஏவியேஷன் நிறுவனம் ஆகியவற்றின் தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் தூய்மையாக்கல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.