--> -->

58-வது படைப்பிரிவினால் முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஏப்ரல் 04, 2020

புத்தளத்தில் உள்ள 58-வது படைப்பிரிவு வீரர்களினால்
கலா ஓயாவில் அமைந்துள்ள லுர்டு மாதா முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மதிய உணவு பொதிகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக குறித்த முதியோர் இல்லத்தின் நிர்வாகிகளினால் அங்கு வசிக்கும் முதியோர்களுக்கு உணவு அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவின் பணிப்புரைக்கு அமைய குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.