--> -->

கடற்படையினரால் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு

ஏப்ரல் 07, 2020

இலங்கை கடற்படையின் தென்கிழக்கு கடற்படை கட்டளையாகத்தினால் அப்பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு  உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனைகளுக்கு அமைய தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.