--> -->

கடற்படையினால் கடல் ஆமைக் குஞ்சுகள் விடுவிப்பு

ஏப்ரல் 08, 2020

இலங்கை கடற்படையினர் அண்மையில் கடல் ஆமைகளை பாதுகாக்கும் திட்டத்தின்கீழ் புதிதாக பொறித்த 96 ஆமைக்குஞ்சுகளை காலிமுக கடற்கரையில் விடுவித்துள்ளனர்.
 
காலிமுகத்திடலில் கழிவுகள் அற்ற பகுதியாக கடற்பரப்பை நிர்வகிக்கும் பகுதியிலேயே இவ்வாறு முட்டை இட்டு குஞ்சு பொறித்த பின்னர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் வழிகாட்டல்களுக்கு கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், கடல்வாழ் இனங்களையும் அதன் வளங்களையும் பாதுகாப்பது கடற்படையின் பிரதான குறிக்கோளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.