--> -->

காலி கடலுக்கு அப்பால் சிக்கித்தவித்த படகிற்கு கடற்படை உதவி

ஏப்ரல் 08, 2020

கடற்பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு படகொன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று (7) கடலில் தத்தளித்து கொண்டிருந்த வேளையில்,  அப்படகிலிருந்த பயணிகளுக்கு இலங்கை கடற்படையினர் குடிநீர் மற்றும் உணவுகளை வழங்கி உதவியுள்ளனர். குறித்த படகு காலி துறைமுகத்திற்கு அப்பால் நங்கூரம் இடப்பட்டுள்ளது.
 
குறித்த படகில் பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதியினரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளித்த கடற்படை உடனடியாக விரைந்து தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.