--> -->

வாழைத்தோட்டத்தை சேர்ந்த மேலும்15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது

ஏப்ரல் 19, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15பேர் இன்று பதிவானதை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக தொற்றுக்குள்ளான 15 பேரும் வாழைத்தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் சுதுவெல்ல, ஜா-எல பிரதேசங்களில் அடையாளங் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் சிலருடன் தொடர்பைப் பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தொற்றுக்குள்ளான 15 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.