--> -->

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை வார்டு விமானப்படையினரால் புதுப்பிப்பு

ஏப்ரல் 20, 2020

இலங்கை விமானப் படையினரால் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை வார்டு தொகுதி அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. வைத்தியசாலையின் அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் குறித்த வார்டு தொகுதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப் பணிகள், பாலாவி விமானப்படை நிலையத்தின் சிவில் பொறியாளர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த திருத்த பணிகள், 24 விமானப்படை வீரர்ககளினால் ஐந்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.