--> -->

மக்னிபிகா வர்த்தக கப்பல் இருந்த இலங்கையர் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு திரும்பினார்

ஏப்ரல் 22, 2020

இத்தாலிய வர்த்தக கப்பலான எம்எஸ்சி மெக்னிபிகா கப்பலில் பணிபுரிந்த இலங்கையரான அனுர பண்டார ஹேரத் கடந்த ஏப்ரல் 6ம் திகதி கப்பலிலிருந்து கடற்படையின் பூச தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அவர் நேற்றைய தினம் வீடு திரும்பினார்.

வீடு திரும்ப முன்னர் அவருக்கு, பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் சான்றிதழும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.