--> -->

கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதி 866 மில்லியனாக அதிகரிப்பு

ஏப்ரல் 29, 2020

கொவிட்-19 சுகாதார மற்றும்  சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 866 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிதியத்திற்கான அன்பளிப்புக்களை இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் (85737373) என்ற விஷேட கணக்கில் வைப்பிளிடமுடியும்.

இந்நிதியத்திற்கு காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும். அவ்வாறு வைப்பிலிடும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும்.

லதிக தகவல்களுக்கு 0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள முடியும்,