--> -->

புது டில்லியில் இருந்து 143 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

ஏப்ரல் 29, 2020

இந்தியாவில் சிக்கியிருந்த 143 பேர் கொண்ட மற்றுமொரு மாணவ குழுவினரை அழைத்துவர இலங்கை விமானம் இன்று (29) புது டில்லியை அடைந்துள்ளது.

குறித்த விமானம் இன்று மாலை 5 மணிக்கு  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.