--> -->

நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 24 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மே 07, 2020

நேற்றைய தினம் 29 கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 29 பேரில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 24 கடற்படை வீரர்கள் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர். அனில் ஜாசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் ஐவர், தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.