--> -->

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

மே 28, 2020

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இன்று ஊரடங்கு சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவித்தலில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 3 ஆம் திகதி புதன்கிழமை மற்றும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை வழமைபோன்று, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.