--> -->

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 223 பேர் வீடுகளுக்கு

மே 31, 2020

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 223 பேர் இன்றைய தினம் (மே, 31) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தியகம, பூனாணி, குண்டசாலை மற்றும் பல்லேகல ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப் படுதலுக்குட்படுத்தபட்டவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இதுவரை சுமார் 11,252 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் படையினரால் நிர்வகிக்கப்படும் 46 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது 5,318 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.